Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கராத்தே போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

நவம்பர் 23, 2023 10:47

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், வெப்படை ஸ்ரீ வள்ளியப்பா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கோஜூகான் ஓப்பன் கராத்தே  போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் திருச்செங்கோடு எட்டர்னல் அகாடமி மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றனர்.

இவர்களுக்கு திருச்செங்கோடு நந்தி காம்ப்ளக்ஸ் பயிற்சி மையத்தில் பாராட்டு விழா தலைமை பயிற்சியாளர் சிந்தியா பாபு மற்றும் பயிற்சியாளர்கள் பாஸ்கர், குழந்தைவேல், வினோத் ,சங்கமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இப்போட்டியில் மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். 

மாநில அளவில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கோஜூகான் இந்தியா கராத்தே தலைமை பயிற்சியாளர், இண்டர் நேஷனல் கராத்தே சாம்பியன் 7-வது பிளாக்பெல்ட் ஜப்பான் கியோஷி மது விஸ்வநாத் தலைமை தாங்கினார். 

மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் முகுந்தன் முதல் பரிசையும், கனிஷ்கா, மேகவர்த்தினி, காருண்யா, காவியா, விஜய்,  நகுல்சரன், நரேந்திரன் ஆகியோர் இரண்டாம் இடமும் பெற்றனர்.

மற்றவர்கள் மூன்றாவது பரிசை பெற்றனர். இவர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு மற்றும் கம்யூனிஸ்ட் மணிவேல், நகரமற்ற உறுப்பினர் வெங்கடேஷ், ராஜா, விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.

தலைப்புச்செய்திகள்